Tuesday, March 5, 2024

கோவில் திருக்குளங்கள் நோக்கம் புனிதம் பேணுவது மட்டுமா?

 

                                                                   திருக்குளம்

                                                    (இரா.கோமகன்)                                                  

பெரும்பாலான பெரிய கோவில்களில் திருக்கும் இருப்பது தமிழகத்தில் மட்டுமின்றி பரவலாக நாடு முழுவதும் உள்ளது. திருகுளங்கள் புனிதமானவைகளாக் கருதப்படுகின்றன. இதில் தெப்ப உற்சவம், தீர்த்தவாரி, புனித நீராடல் நடைபெறுகின்றன. இதனால் இதன் புனிதம் மேலும் உறுதிப்படுகின்றது, திருக்குளங்கள் கோவிலின் நீர் ஆதாரமாக விளங்குகின்றன.சுற்றுச்சூழல் பாதுகாப்பு பல்லுயிர் பாதுகாப்பாகவும் உள்ளன.

திருக்குளங்கள் புனிதம் என்ற நோக்கங்களுக்காக மட்டும் கட்டப்பட்டதா? அல்லது இதற்கு வேறு காரணங்களும் உள்ளதா? எனும் நோக்கில் இதுவரை அவை அணுகப்படவில்லை. திருக்குளங்கள் பெரும்பாலும் கோயிலின் வடகிழக்குப் பகுதியில்தான் அமைக்கப்பட்டிருக்கும். இதில் தேங்கும் நீர் சுற்றியுள்ள நீர் ஆதார அமைப்புகளான கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பயன்படுவதாக பரவலாக கூறப்பட்டாலும் இதன் முதன்மையான நோக்கம் அதுவல்ல.  

பெரியகோவில்கள் செங்கல் மற்றும் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. அதிக பாரமுள்ள பெரும் கட்டுமான அமைப்புகளைக் கொண்டு இருக்கின்றன. இந்த பெரும் கட்டுமானங்கள் அதிக எடையை பூமிக்கு கடத்துகின்றன. இதனால் அதிக பாரம் தாங்கும் கடைக்கால் எனும் அஸ்திவாரங்கள் தேவைப்படுகின்றன. நல்ல தாங்குதிறன் கொண்ட மண்ணடுக்குகளில் மீது இந்த கடைக்கால் அமைக்கப்பட வேண்டும். இந்த கடைக்கால்களை தாங்கும் பூமி அதாவது மண்ணடுக்குகள் கோயில் கட்டும் பொழுது இருந்த அதே தன்மையுடன் எப்பொழுதும் பராமரிக்கப்பட வேண்டும்.

பூமி மண்டுக்குகள் மயிரிழை நீர்வழிதடங்கள் (capillaries) கொண்டன. இந்த மயிரிழைத்தடம் வழியா கசியும் (seepage) நீரானது மண்ணின் தாங்குதிறனை ( safe bearing capacity ) தீர்மானிப்பதாக உள்ளது. மண்டுக்குகளில் உள்ள ஈரப்பதம்                  (moisture) மண்ணின் உறுதியை (stability) தாங்குதிறனை நிலைப்படுத்தவும்  பாதிக்கவும் செய்யும் திறன் கொண்டவை. குறிப்பாக களிமண் அடுக்குகளின் ஈரப்பதம்  அதன் தாங்குதிறனை தீர்மானிக்கிறது.

                                                       


                                              

இதை எளிதாக விளங்கிக் கொள்ள வெயில் காலங்களில் காய்ந்து போன வயல்வெளிகளில் மேல் மண் அடுக்குகள் பாலம் பாலமாக வெடித்துக்கிடப்பதன் மூலம் அறியலாம். காரணம் மண்ணின் ஈரம் உலர்ந்து போனதால் சுருங்குகின்றன. மறுபடியும் இவற்றில் நீர் ஏறும் பொழுது அதன் ஈரத்தன்மை மீளப்பெற்று விம்மி வீங்குகின்றன.மண்ணின் ஈரப்பதம் அதைச் சுருங்கி விரியச்செய்கிறது காரணம் அதில் உள்ள மயிரிழைத் தடங்கள். பல கட்டிடங்களின் அஸ்திவாரம் பாதிப்புகள் தனால் நிகழ்கின்றன. சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு கட்டடத்தின் உறுதித்தன்மையும் கடைக்கால் தாங்கு திறனும் பாதிக்கப்பட்டு வடிவமைப்பு சிதைகின்றது.

கோவில் திருக்குளங்களில் தேங்கும் நீர் மூலம் மண்ணாடுக்குகளில் ஏற்படும் நீர்க்கசிவு மண்ணின் ஈரப்பதத்தை சமப்படுத்தி சீர்படுத்துகிறது.கோவில் கடைக்கால் (அஸ்திவாரம்) அமையப்பெற்ற மண்ணடுக்கின் ஈரப்பதம் சீராகப் பராமரிக்கப்படுகின்றது. இதனால் தான் சில கட்டடங்களைச் சுற்றிக் கோடை காலத்தில் தண்ணீர் ஊற்ற சொல்லப்படுகிறது. பெரிய கோவில்களின் கட்டமைப்புகளில் அஸ்திவாரம் எனப்படும் கடைக்காலைப் பாதுகாக்க  திருகுளங்கள் அவசியமாகின்றன. அவை அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுவே. இதுபற்றி விரிவான கள ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் நீர் ஆதாரமாக அமைக்கப்படும் குளங்கள் ப்பணியைச் செய்கின்றன. வீட்டுக்கு வீடு குழாய் தண்ணீர் வந்தவுடன் ஏரி குளங்கள் மீது அக்கரை அழிந்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு வீட்டுக்கும் அஸ்திவாரம் உண்டு அந்த அஸ்திவாரம் உட்கார்ந்திருக்கும் ண்ணடுக்குகளின் ஈரப்பத்தை சீராக பராமரிக்க நிலத்தடிநீர்க்கசிவு தேவையை ஊர் பொதுக்குளங்கள் நிறைவேற்றுகின்றன என்பதை சற்று நினைவில் நிறுத்துவோம்.


























































































































Monday, February 20, 2023

History of Veeranam lake ( veeranarayanappereri/ Paranthagappereri) - வீராணம் ஏரி வரலாறு : இரா.கோமகன்.

 

                                                             வீராணம் ஏரி வரலாறு

                                                                                            இரா. கோமகன்.

வீராணம் ஏரி என அழைக்கப்படும். வீரநாராயணன் ஏரி மற்றும்  அதோடு தொடர்புடைய நீர் ஆதார கட்டமைப்புகளின் வரலாற்றை அறிவதற்காக முதலில் வீரநாராயணன், மதுராந்தகன் என்னும் பெயர் கொண்ட சோழ வேந்தனைப் பற்றிய செய்தி உறுதி செய்யப்பட வேண்டும். பராந்தக சோழன் தனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் கி.பி.907-ல் மதுரையை வெல்கிறார். அதனால் மதுராந்தகன் என்ற பெயரை பெறுகிறார். இதுப்பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரிகள் தனது   நூலில் (The Colas-Page.122)The first stage in the account of the Mahavamsa corresponds, doubtless, to the raid on Madura in the first years of Parantaka’s rule which leads his adopting the title Madurantaka, the destroyer of Madura”எனக் குறிப்பிடுகின்றார்.

சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தனது பிற்கால சோழர் வரலாறு என்ற நூலில் இவ்வேந்தனுக்கு வேறு சில பெயர்களும் அந்நாளில் வழங்கியுள்ளன என்பது கல்வெட்டால் அறியப்படுகிறது. என்கிறார்.(பிற்காலச் சோழர் வரலாறு-2000) அவை வீரநாராயணன், வீரசோழன், பண்டிதவற்சலன், குஞ்சரமல்லன், சங்கிராமராகவன், இருமடிசோழன் என்பன. திருவாங்கூர் ஆர்க்கியாலிஜிகல் சீரிஸ் இவற்றோடு சிங்களாந்தகன் எனும் பெயரையும் சுட்டுகிறது.(Travancore Archaeological series-vol-III)

பராந்தக சோழன் தனது பெயரா வீரநாராயணன் என்ற பெயரில் வீரநாராயணசதுர்வேதிமங்கலம் என்ற ஒன்றை உருவாக்கினார்.(Travancore Archaeological series vol-III) இதன் புவி எல்லைகள் வீரநாராயணன் ஏரிக்கு கிழக்கு கொள்ளிடத்தின் வடகரைக்கு வடக்கு பகுதியில் கட்டுப்பட்ட. சிதம்பரம் வட்டத்தின் தென்மேற்குப் பகுதி காட்டுமன்னார்குடி வட்டத்தின் தென் மேற்கு பகுதியை உள்ளடக்கியது. இந்த சதுர்வேதிமங்கலம் உருவான காலத்தை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை எனினும் கி.பி.910-க்கும் 950-க்கும் இடைப்பட்டகாலத்தில் அமைந்திருக்கலாம். வீரநாராயணப்பேரேரியும் இக்காலத்தியது எனலாம். வீரநாராயண சதுர்வேதிமங்கலம் பெருங்குறிப் பெருமக்களுக்கு இராசராசோழன் கி.பி.988- ல் எழுதிய ஶ்ரீமுகம் ஆதித்தகரிகாலனைக் கொன்ற துரோகிகள் பற்றிக் குறிப்பிடுகிறது.( ARE-1920, EI-Vol-XXI)

வீரநாராயணசதுர்வேதிமங்கலம் பகுதியில் வீரநாராயணப்பேரேரி அமையப்பெற்றிருக்கிறது. தற்பொழுது வீராணம் என  அழைக்கப்படுகிறது. இந்த ஏரியை பராந்தக பெரிய ஏரி என ஒரு கல்வெட்டு கூறுகிறது. சிதம்பரம் வட்டத்தில். திருச்சின்னபுரம் என்னும் ஊரில் உள்ள. அகத்திஸ்வரர் கோயில் முன்புள்ள ரிஷப மண்டபத்தின் உள்ள கூரையில் உள்ளக் கல்வெட்டில் பராந்தகஏரியை குறிப்பிட்டு அதற்கு செய்யப்பட்ட பராமரிப்பு பற்றியும் இக்கல்வெட்டு கூறுகிறது. இது விக்கிரம சோழன் காலத்தை காலத்தியது என்று தெரியவருகிறது. வீராணம் ஏரி அதை உருவாக்கிய பராந்தகச்சோழன் பெயரால் பராந்தகப்பேரேரி என்றும் அழைக்கப்பட்டது தெரியவருகிறது. ( ARE-1845-46)

வீராணம் ஏரிக்கு வீரநாராயணன்பேரேரி என்று குறிப்பிடுகிற செய்தி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள சு .ஆடுதுறை என அழைக்கப்படும்  திருக்குரங்காடுதுறை  னும்  ஊரின் குற்றம் பொறுத்த ஈஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்கு சுவர் பீடத்தில் உள்ள கல்வெட்டு. முதலாம் மாறவர்மன் பராக்கிரம பாண்டியன காலமான கி.பி. 1339-ம் ஆண்டுக்கானது கல்வெட்டின் ஒன்பதாவது வரியில், “ த குறுகையில் காணி உடைய பள்ளிகளில் மரகத சோழன் முத்தரையன் உள்ளிட்டோர் திருநாள்தோறும் குறைவறுத்து வீரநாராயணன் பேரேரிக்கு மேற்கு பச்சைமலைக்கு கிழக்கு, 10-ம் வரியில் - காவிரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணையாற்றுக்கு தெற்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தோறும் என அக்கல்வெட்டு தொடர்கிறது, இக்கல்வெட்டின் மூலம் வீரநாராயணப்பேரி என்ற செய்தி அறிய வருகிறது.( ARE- 1913, SII-Vol: XXVIII)

 இந்த பேரேரிக்கு ராஜேந்திரசோழப்பேராறு என அழைக்கப்பட்ட கொள்ளிடத்தின் வடகரையிலிருந்து மதுராந்தக வடவாறு என வழங்கப்பட்ட வடவாறு நீரேற்றும் நீராதாரமாக பயன்பட்டு இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றுக்கு ராஜேந்திரசோழபேராறு என்ன வழங்கப்பட்டதற்கான சான்று கீழப்பழூர் ஆலந்துறையார் கோயில் இரண்டாம் பிரகாரம் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. க்கல்வெட்டு விக்கிரமசோழன் காலமான கி.பி.1124-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. (ARE-1926 ) அக் கல்வெட்டின் ஐந்தாம் வரியில், “தெற்கு ஊருக்கு மேற்கு குழலுடையாந் பற்று உட்பட்ட நிலம் அரை வேலியும் தெற்கில் கீழக்கரை நிலத்தில் கீழ் ஆரிவாக்காலுக்கு கிழக்கு வாரமடைக்கு மேற்கு நாலாம் கண்ணுற்றுக்கு தெற்கு ராஜேந்திரசோழ பேராற்றுக்கு வடக்கு நிலம் என்ற செய்தி உள்ளது. அதே கோயிலின்  இரண்டாம் பிரகாரத்து  தெற்கு சுவர் கல்வெட்டானது இரண்டாம் ராஜாதிராஜன் காலமான        கி,பி, 1177 -இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டின் மூன்றாம் வரி, “த்து வருகிறவர்களைத் தவிர ராசகுவராதல் ராசேந்திரசோழபேராற்றுக்கு தெற்குட்பட்ட நாடுகளில் உள்ளாராதல் ஆழ்வாநுக்கு பத்தொந்பதாவது…..”என்றும் அதே கல்வெட்டின் ஐந்தாம் வரி நுபவிக்க பெறாதார்களாவும் ராசேந்திரசோழபேராற்றுக்கு தெற்கு உள்ளார் பிந்பு விலைகொள்ளவும் பெறாதவர்களாகவும் குடிநீக்கித் தேவதானம் பள்ளிச்சந்தம்…..” என அந்த செய்தி தொடருகிறது. (ARE.1926) க் கல்வெட்டுகளின் மூலம் கொள்ளிடம் ராஜேந்திரசோழப்பேராறு என வழங்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. கொள்ளிடம் அக்காலத்தில் இராசேந்திரசோழப்பேராறு  என  அழைக்கப்பட்டிருக்கிறது.

கொள்ளிட வடகரையிலிருந்து மதுராந்தக வடவாறு என்று வழங்கப்பட்ட வடவாறு நீர்வரத்து ஆதாரமாக பயன்பட்டு இருக்கிறது. மதுராந்தகன் என்பது பராந்தகனின் விருது பெயர் என முன்பு சுட்டப்பட்டுள்ளது.  மதுராந்தக வடவாறு என்ற குறிப்பு கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கருவறை தெற்குச் சுவர் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.(ARE-1892) இக் கல்வெட்டு. ஐந்தாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலமான கி. பி. 1329 - இல் எழுதப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டின் ஆறாம் வரி ஆர்க்கு வடக்கு ராஜேந்திரசோழநல்லூரில் மதுராந்தக வடவாற்றுக்கு மேற்கு அதிகை நாயகன் வாய்க்காலுக்கு கிழக்கு ராசராசன் பெருவழிக்கு….” எனத் தொடருகிறது.( ARE-1892: SII-Vol-IV) இக்கல்வெட்டின் மூலம் தற்போதைய வடவாறு அக்காலத்தில் மதுராந்தக வடவாறு என வழங்கப்பட்டுள்ள செய்தி தெரியவருகிறது.

மேலும் கொள்ளிடத்தின் தென்கரை கடல் முகத்துவாரம் வரை கரிகாலக்கரை என வழங்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கருவறை வடக்கு மேற்கு விருத்த குமுத பகுதியில் உள்ள கல்வெட்டானது வீரராசேந்திரனின் காலமான கி,பி.1068 - இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.(ARE-1892:SII.Vol-IV) இக்கல்வெட்டு வாசகத்தின் நூற்றி ஐம்பத்தியிரண்டாவதுரியில் முக்காணிக் கீழ் முக்காலே ஒருமாவும் கரிகாலகரைக்கு தெற்கு அகையாறு புந்செய்நிலம்…”என செய்தி தொடர்கிறது. இதில் குறிப்பிடப்படும் நிலம் நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள ஓலயாம்புத்தூரில் உள்ளது எனவே கொள்ளிடத்தின் தென்கரை கரிகாலகரை என வழங்கப்பட்டது இக் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

சோழவேந்தன்  ராஜேந்திரசோழனால் ஏற்படுத்தப்பட்ட சோழகங்கம் என்னும் பொன்னேரினுடைய மிகுநீர் துராந்தக வடவாற்றின் மூலம் வீர நாராயணப் பேரேரியை அடைகிறது. ராஜேந்திர சோழனின் காலமான கி.பி.1018-ல் ஏற்படுத்தப்பட் திருவாலங்காட்டுச்செப்பேட்டின் வடமொழி பகுதியின் நூற்றுஇருபத்திநாலாவது வரி இப்படி கூறுகிறது. தன்னுடைய மண்டலத்தில் சோழகங்கம் என்ற பெயருடையவும் கங்கை நீரால் ஆனதுமான வெற்றித் தூணை நிறுவினான் என்று கூறுவதன் முலம் பொன்னேரிக்கு சோழகங்கம் என பெயர் உள்ளது தெரிய வருகிறது.(ARE-1903-04: SII.Vol-III; MER-1916) மேலும் கங்கைகொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் கோயில் கருவறைக்கு மேற்கு சுவர்த்தில் உள்ள விஜய நகர பேரரசு மன்னர் விருப்பண்ண உடையாரின் காலமான கி பி. 1397- இல் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டின் ஏழாம்ரி நயினார் திருநாமத்துகாணியான பிடா….. திருவாசல் நாராசத்துக்கு மேற்கு பொன்னேரிக்கு கிழக்கு….” (ARE-1892; SII.Vol-IV) என எல்லை இடுவதன் மூலம் பொன்னேரி பெயர் வரலாற்றில் தெரியவருகிறது.

பொன்னேரியின் மிகுநீர் ஓடும் வாய்க்கால் தற்பொழுது கருவாட்டு ஓடை என்று அழைக்கப்படுகிறது. கருவாட்டு ஓடைக்கு னைவெட்டுவான் கால் என அழைக்கப்பட்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்  கல்வெட்டு  ஐந்தாம் மாறவர்மன் விக்கிரம சோழன் விக்கிரம பாண்டியன் காலமான கி பி.1329-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக் கல்வெட்டின் நாலாம் ரி உடலாக இவ்வூர் வீரபோகங்களில் குலோத்துங்கசோழநல்லூரில் மதுராந்தக வடவாற்றுக்கு மேற்கு னைவெட்டுவான் காலுக்கு கிழக்கு வல்லபநல்லூருர்  எல்லைக்கு வடக்கு கொல்லாபுரத்து  எல்லைக்கு தெற்கு நடுவுட்பட்ட செல்கால் கார்மறு நிலமும்” என  எல்லை இடுவதன் மூலம் இன்றைய கருவாட்டு ஓடைக்கு அன்றைய தினம் அன்றைய நாளில் னைவெட்டுவான் கால் எனப்  பெயர்  விளங்கியது தெரியவருகிறது. (ARE-1892; SII.Vol-IV). இக்காலத்தில் கொல்லாபுரம் அதே பெயரிலும் குலோத்துங்கசோழநல்லூர் புளியந்தோப்பு குலோத்துங்கநல்லூர் எனவும் வல்லபநல்லூர் வளவநேரி எனவும் வழங்கப்பெறுகிறது.

தற்பொழுது வீரணம் பதினாறு கீலோமீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கரையில் இருபத்திஎட்டு மதகுகளுடனும் மேற்குகரை முப்பத்தி ஒன்பது கிலோமீட்டருடன் ஆறு மதகுகளுடன் பாசன ஏரியாகவும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியாகவும் உள்ளது. இதற்கு நீர் வழங்கும் வடவாறு கொள்ளிடம் ஆற்றின் வடகரையிலிருந்து பிரிகிறது. இக் கொள்ளித்தின் குறுக்கே கி.பி.1836-ல் கதவணை ஆங்கிலேயர்களால் கட்டப்படுகிறது. (Madras District Manual. Tanjore. Vol-I), இந்த கதவணை கட்டுவதற்கு கங்கைகொண்ட சோழபுரத்தின் முதல் இரண்டு திருவாயில்கள் முதல் மற்றும் இரண்டாம் சுற்று திருமதில்கள் பிரித்தெடுக்கப்பட்டு அக் கற்கள் பயன்பட்டிருக்கிறது, இதற்கு சான்றாக கி.பி.1885-ல் பரோஸ் நிறுவனம் ஆங்கில அரசுக்கு தயாரித்த அறிக்கை ஒன்றில் இத்தொடர்  உள்ளது “ கங்கைகொண்டபுரத்திலுள்ள ஒப்பற்ற கோவிலை சொல்லும் பொழுது கொள்ளிடம் ஆற்றில் கீழ் அணைகட்டு கட்டும் பொழுது இந்த கோவிலின் அழகான சிற்பங்கள் மண்டபங்கள் சுற்றுசுவர் முழுவதும் அடியோடு அழிக்கப்பட்டது. இந்த ஊரைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இந்த அழிவைத் தடுக்க கடுமையாக போராடினார்கள். அரசாங்க அதிகாரிகள் இதற்கான உரிமைப்பத்திரம் யாரிடமும் இல்லை எனக் கூறி இடித்ததோடு தடுத்தவர்கள் மீது அரசு அதிகாரிகளை வேலை செய்யாமல் தடுத்து குந்தகம் செய்தார்கள் எனவும் தண்டிக்கப்பட்டனர். இடிக்கப்பட்ட கட்டுமானங்கள் கருங்கற்களுக்கு பதில் செங்கல்லால் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதி மொழி இன்னும் அப்படியே உள்ளது.” (Pharoah’s Gazetteer of South India-Madras., Indian Antiquary- IV and The Colas;2000) எந்த ஆற்றின் மீது ஆதிக்கம் செலுத்தி தன் பேரால் இராசேந்திரசோழப்பேராறு என வழங்கப்பெற்றதோ அந்த ஆறு அவர் கலைப்படைப்பை தன்னுள் பேரணையாக கொண்டு அவரின் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது.

உதவிய நூல்கள், செய்திகள்.

1.        The Colas- by K.A.Neelakandasastri.p.122 in year 2000, published by Madras University.

2.        Travancore Archaeological Series -Vol-III.p.34 verse 58-60.

3.        Annual Report on Epigraphy. ARE; 12 of 1945-46.

4.        Annual Report on Epigraphy. ARE: 35 of 1913

5.        South Indian Inscriptions, SII.Vol-XXVIII.No.35.

6.        Annual Report on Epigraphy. ARE; 112 of 1985.

7.        South Indian Inscriptions.SII-Vol.V.no-673.

8.        Annual Report on Epigraphy.ARE.259 of 1926

9.        Annual Report on Epigraphy.ARE.76 of 1892.

10.     South Indian Inscriptions, SII: Vol- IV; 523.

11.     Annual Report on Epigraphy. ARE: 82 of 1892.

12.     South Indian Inscriptions. SII. Vol -IV. No: 529

13.     Annual Report on Epigraphy. ARE: 233-35 of 1903-4.

14.     Madras Epigraphical Report.p.11-20 of 1916.

15.     South Indian Inscriptions. SII. Vol- III. No: 205.

16.     Annual Report on Epigraphy. ARE.320 of 1964-65

17.     Annual Report on Epigraphy. ARE.76 of 1892.

18.     South Indian Inscription. SII. Vol - IV.No.523.

19.     Madras District Manual. Tanjore. Vol-I.p.106 of 1906.

20.     Pharoah’s Gazetteer of South India, Madras.p.338-39 0f 1855

21.     Indian Antiquary. Vol-IV.p.274

22.     The Colas-Note.B-p.234 in the year 2000.

Wednesday, January 16, 2019

சண்டேசுவர ஆட்கொண்டார்

கங்கைகொண்டசோழீஸ்வரத்தின் அடையாளம் எனக் கூறும் அளவிற்கு பரந்துபட்டக் கவனத்தைப் பெற்றிருக்கும் இச்சிலைத் தொகுப்பு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.  

சண்டேச்வர அனுகிரகமூர்த்தி எனப்படும் சண்டேஸ்வர ஆட்கொண்டார் அம்மையோடு சண்டேசனுக்கு கொன்றை மாலைச் சூடுகிறார்.  தன் மீது கொண்ட குலையாத பக்தியால் தந்தையையே கொன்றவனை இனி நான் உனக்கு அப்பன் என மகனாக வரித்துக் கொண்டு சடையிலிருந்த கொன்றை மாலையைச் சூடுகிறார் சிவன். அதை வணங்கி மெய்யடக்கத்துடன் ஏற்கிறார் சண்டேசன்.

இது பலர் அறிந்த புராணக் கதை.    
                             
அறியாத செய்தியும் இதுவரைப் பதிவுறாதத் செய்தியும் ஒன்று உண்டு.  
                            
இந்த சிலைக்கு இராசேந்திரச்சோழன் மிகுந்த தனிக் கவனமும் அக்கரையும் கொண்டிருந்திருந்தார் என்பது தான் அது.  
                              
என்ன கோமகன் உடனிருந்து பார்த்தது போல் சொல்கிறாய்? எனும் வினாவிற்கு நான் கூறுவது இச்சோழீஸ்வரத்தில் அவர் கூட இருந்து பார்த்தாலும் விளங்காது அவரின் உயிர் உடல் கொண்டு பார்த்தால் விளங்கும்.  
                                     
ஆம்.

கொஞ்சம் மற்றக் கோவில் அமைப்பை நினைவில் கொண்டு வாருங்கள். செவிட்டுசாமி எனும் சண்டேஸ்வர் சன்னதி இருக்கும் இடத்தை நினைத்துப் பாருங்கள். அது கோமுகம் எனும் அபிஷேகநீர்ச் சாளவத்திற்கு வலது பக்கமாகவும் அர்த்தமண்டபத்தின் வடபுற நுழைவு வாசலுக்கு இடப்பக்கமாகவும் அமைந்திருக்கும். இந்த அமைப்பு தான் எல்லாக் கோவிலிலும் இருக்கும் அது தான் அமைப்பு விதி.  
                           
ஆனால் கங்கைகொண்டசோழீஸ்வரத்தில் அப்படி இருக்காது. மற்றக் கோவிலுக்கு மாறாக அர்த்த மண்டபத்தின் வடபுறத்தின் நுழைவு வாயிலின் வலதுபுறம் அமைந்திருக்கும். அதாவது மூலவரை வணங்கி வடக்குப் பக்கவாசல் வழி வெளியே வந்தால் எல்லாக் கோவிலிலும் இடதுகைப் பக்கம் அதாவது  தஞ்சாவூரில் உள்ளது போல் இருக்க வேண்டிய சண்டேசுவரர் சன்னதி மாறி க.கொ.சோ.புரத்தில் வலது கைப்பக்கம் இருக்கும்.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் இந்த அரிதான வேறுபாட்டை மாற்றத்தைக் காண்பதில்லை. 
                
ஏன் அப்படி மாற்றி இப்படிக் கட்டவேண்டும்.   
                          
அது தான் இராசேந்திரன்.
                                
இந்த சிலையின் சூட்சமம், மறைபொருளே அதில் தான் இருக்கிறது.ஈர்ப்பின் மையமே அதனால் தான்.                     

ஏனெனில் அவர் சிவசரணசேகரன். சிவனைச் சரணடைந்தவரைக்காப்பவர். சிவசரணரை வணங்குபவரை வணங்குபவர்.   

அந்த மறைபொருளை அடுத்துப் பார்போம்.                                                  
               

Saturday, January 12, 2019

காமதகனன்

முருங்கை மரம் ஏறினால் தான் வேதாளம். முயற்சியில் தளராமல் அதைத் துரத்தினால் தான் விக்கிரமாதித்தியன்.

குழந்தைகளுக்கு விக்கிரமாதித்தியன் கதைகளைச் சொல்லிக்கொடுங்கள் அது இல்லாததால் ஹாரிபாட்டர் ஓடுகிறது. வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு எனும் தொடரைப் பயன் படுத்தவாயினும் இக்கதையைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இப்போ க.கொ.புரம் வேதாளம் தம் முருங்க மரம் ஏறப்போகுது.

தென்புற கோஷ்ட்டச்சிற்பங்களில் இன்னும் ஹரிஹரன் மட்டும் உள்ளது அதை நாளை பார்ப்போம்.

தென்புரம் ஞான ஆசிரியன் தென்முகக்கடவுள் ஆலமர்ச்செல்வனை நடுநாயகமாக வைத்தது போல் வடபுரத்தில் நான்முகனை தன் இருதேவியருடன் வைத்து தன் கோட்ப்பாடுகளை விரித்திருப்பான் இராசேந்திரன்.  
      
திருநன்னீராட்டல் நீர் வழிப்போக்கி கோமுகத்தின் மேல் நான்முகன் இருப்பது புதியது அல்ல.

ஆனால் வேறுஎங்கும் இல்லாதபடி தன் இருதேவியருடன் தாடிமீசையுடன் பிரம்மா இங்கு மட்டும் தான் உண்டு. தமிழகத்தில் வேறு இடத்தில் இருப்பதாக எம்மளவில் செய்தி இல்லை. 
   
வட பக்கத்தில் தான் இக்கோவிலின் முதல் கல்வெட்டே உள்ளது. கோவில் பீடத்தின் ஈசான்ய மூலையில் இது தொடங்குகிறது. அதன் மேல்பகுதியில் இருப்பவர் தான் காமதகனமூர்த்தி. காமத்தை அழித்தவர். காமனை அழித்தவர். அவர் common ஆக இருப்பதால் தான் காமன் என கிருபானந்தவாரியார் சொல்லுவார்.

சிறுவயதில் காமுட்டிக்கோவில் ரதிமன்மதன் பாட்டு, காமுட்டித்திருவிழாவில் மன்மதனைக் கொளுத்துதல் எல்லாம் பரபரப்பான விளையாட்டு. தமிழன் கொண்டாடிய காமன்பண்டிகை.  மாசிமாதம் அம்மாவாசை முடிந்து தொடங்கும் விழா, எரிந்தகட்சி எரியாதகட்சி பாடல் எல்லாம் போயேபோச்சு.. இன்று பெரும்பாலும் எம்பகுதியில் காமுட்டிக் கொளுத்துவது நின்றுவிட்டது.

சிற்பத்திற்கு வருவோம். சிவனின் தவத்தைக் கலைக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக ஏவப்பட்டவன் மன்மதன். அம்முயற்சியில் அவர் எரிந்து போகிறான். இது கதை.

இக்கோவில் சிற்பங்களில் அழகானவைகளில் இதுவும் ஒன்று. இச்சிற்பத்தொகுப்பில் கீழே ரதி மன்மதனைத் தடுக்கின்றாள். தூண்டப்பட்ட மன்மதன் சிவனைத் தூண்டுகிறார். தவத்தில் தூண்டப்படும் சிவனை வடித்ததில் தான் அற்புதத்தை அட்டகாசத்தை  நிகழ்த்தியிருக்கிறான் சிற்பி.

உடலில் இடப்பாகம் சந்திரநாடியும் வலதுபாகம் சூரியநாடியும் ஓடும். இடபாகம் அம்மை வலப்பாகம் அப்பன். 

காமத்தின் ஈர்ப்பில் சந்திரநாடியில் முதற்சலனம் இருக்கும். இது இடது கண்துடித்தலில் வெளிப்படும். சங்கப்பாடல் கூறும் இடதுகண் துடிப்பை " நுண்ணேர் புருவத்த கண்ணும ஆடும்
மயிர்வார் முன்கை வளையும் செறூ உம்",

இப்பொழுது பாருங்கள் சிலையின் இடதுகண்ணை அம்மை பாகத்தை. வள்ளுவனும் இதை சொல்லுவான் கண்விதுப்பழித்தலில்  காமம் கொண்டக் கண்கள் என (குறள்: 1175) சிலையின் வலப்பாகக் கண்ணை விட இது சொருகிய நிலையில் இருக்கும்.

கூடவே தூண்பட்ட இடப்பாகத்தின் சந்திரநாடி மலர்ந்ததைக் காட்ட இதழின் இடபாகம் மயங்கியப் புன்னகைத் தெரிக்கும். முகம் பூரித்து மலர்ச்சியுற்றிருக்கும். சலனப்படாத சிவபாகத்தின் முகம் இருக்கத்துடனிருக்கும். சிரிப்பு அற்று இருக்கும். உடல் தளர்வற்று இருக்கும். சலனப்படாதது சிவம். காமத்தை அழி  எனச் சுட்டும்.

சிவனால் எரிக்கப்படாத மன்மதன் உண்டு அவன் இராசேந்திரன் எனச் செப்பேடு சொல்லுகிறது.   

PC: Ramesh Muthaiyan

#Gangaikondacholapuram
#Cholasculptures.

Sunday, January 6, 2019

உமையொருபாகனில் கட்டுடையும் கோட்பாடு


இப்படியெல்லாம் கூடவா இருக்கும்?
எல்லாவற்றிலும் இப்படி இருக்குமா?
மதிப்பிற்குரிய விஷயத்தைப் போற்றி காலம் கடந்தும் நிற்கும் வகையில் இருக்க இப்படி  செய்வாங்களோ?

எனும் மாதிரியான வினாக்கள் வரலாம் படித்த பிறகு, பார்த்துவிட்டு நகர்ந்தால் வராது. 
படிக்க அலுப்பு படுபவர்கள் நகர்வது நலம்.

எங்கே விஞ்ஞானம் பதில் அளிக்க முடியாமல் நின்று விடுகிறதோ அங்கே மெய்ஞானம் தொடங்குகிறது என்பார் விவேகானந்தர்.

உமையொருபகன்.
அர்த்தநாரீஸ்வரர்.
அம்மையப்பன்.
சிவசக்தி.

சிவனும் பார்வதியும் ஓருடலில் சமபாகமாக இணைந்துள்ள ஒரு படிமத்தின் பெயர் தான் இது.     அம்மை இடமாகவும் அப்பன் வலமாகவும் உள்ள சிலை.

அம்மையை வலமாக ஏன் வைக்கக் கூடாதா?

முடியாது.

ஏனெனில் இது ஒரு பேருண்மையின் ஆவணம்.

யோக சாஸ்திரத்தில், மரபு மருத்துவத்தில்  உடலில் இடா என இடது நாடியையும் பிங்கல என வலது நாடியையும் குறிப்பர். இதை சூரியநாடி சந்திரநாடி எனவும்  சூரியகலை, சந்திரக் கலை எனவும் ஆண்நாடி பெண்நாடி எனவும் அழைப்பதுண்டு.

என் பார்வையில் சூரியநாடி(ஆண்நாடி) அப்பன், சந்திரநாடி(பெண்நாடி)அம்மை.காளை விழிப்புணர்வுள்ளப் பயிற்சி.

இந்த நாடிகள் சுவாசத் தொடர்புடையன. ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் ஒரு நாளைக்கு 21600 சுவாசங்களை விடுகிறான்.

இதை வடலூர்  சத்தியஞான சபையைச் சுற்றி கிடக்கும் சங்கிலி மூலம் வள்ளலார் அறிவுருத்துகிறார்.சங்கிலிச் சரடுகளை மூக்குத் துவாரத்தின் குறுக்குவெட்டு போல் செய்திருப்பார்  அதன் எண்ணிக்கை 21600

சுவாசம் இடது பக்கம் அதாவது சந்திரநாடியில் 12 அங்குல சுவாசமும் வலது பக்கம் சூரிய நாடியில் 16 அங்குல சுவாசமும் நடைபெறுகிறது. இரு நாசியிலும் சமமான சுவாசம் 64அங்குலமுடையது இது சுழி முனையோடானது.

இடது,வலது நாடிகளை சமன் படுத்தி நடு நாடி ஓட்டம் சுழி முனைப் பயிற்சியால் குண்டலிணியம் வெளிப்படும்.அது விரிந்து சகஸ்தரதாராவாக ஆகும். அதுவே சிவம்.

இந்த நாடி ஓட்டத்தை பாம்பைக் கொண்டு விளக்குவது மரபு.

அரசமரத்தடியில் குளத்துக்கரை பிள்ளையார் பக்கத்தில் இருக்கும் சிலையில் இரு நாகங்கள் வளைந்து பின்னி நின்று  படமெடுக்கும் பார்த்திருப்பீர்கள்  அதன் தலைப் பாகங்களுக்கு நடுவே லிங்கம் இருக்கும் அந்த  சிலை இதைத் தான் சொல்கிறது.

இது என் பார்வை.

இதை தான் அற்புதமான கலைவடிவமான அர்தநாரீஸ்வர் சொல்லுகிறது.

ஆணுக்கு பெண் சமம் என்பதற்காக இது என்பதெல்லாம் திருவிளையாடல் வசனத்திற்கே பயன்படும்.

சரி, கங்கைகொண்டசோழீசர் உமையொருபாகனுக்கு வருவோம். இந்த கோவிலில் நின்னு நிதானமாக ஒவ்வொரு பாகமாக பார்க்க வேண்டிய சிலையில் இதுவும் ஒன்று.  

நீங்கள் கலை ஆர்வலராய் இருந்தால் உங்கள் தலையில் ஊமத்தங்காய் தேய்க்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

இந்த சிலை நான் பார்த்த உமையொருபாகன் சிலையில் என்னை அதிகம் கவர்ந்தது இது.

இதில் செய்யப் பட்ட முயற்சிகள் அற்புதம்.

அம்மையின் உடை, மேகலை,குரங்குசெரி, தோல்வளை,அங்கம்,பங்கம் எல்லாமே அப்பனிடம் மாறுபடும்.ஆனால் வேறுபாடு தெரியாமல் ஒன்று போல் தெரியும்

இது கூட எளிமையானதே.

ஆனால் ஒன்று போல் தெரியும் முகத்தில் ஆண் பெண் வேறுபாட்டை காட்ட முடியுமா?

முடியும் எனச் சொன்ன முயற்சியின் வெற்றியை இச் சிற்பம் சுமக்கிறது.

அப்பனின் முகபாகத்தில் கன்னம் சற்று பருத்து இருக்கும் அம்மை முகபாகத்தில் கன்னம் சற்று வடிந்து ஒடுங்கி இருக்கும்.சிற்ப மரபில் சொல்லும் முக அமைப்புகளில் அப்பனின் முகபாகம்"வ" வகையிலும் அம்மையின் முகபாகம் மாங்காய் வடிவ வகையிலும் வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேறுபாட்டை உணரமுடியாமல் முகத்தில் தெரியும் சிரிப்பு மயக்கி விடுகிறது.

அம்மையின் காதில் தாடகம் அப்பனின் காதில் குழை.

தலைக்கோலத்தில் ஜடாமகுடம் அதில் கேசபந்தத்தில் அப்பனின் பாகத்தில் உள்ள தலைமுடிக்கோதலும் அம்மையின் தலைமுடிக்கோதலில் காட்டப்படும் வேறுபாடு அதீத நுணுக்கம். கவனமெடுப்பில் உச்சம்.

அர்த்தநாரிஸ்வரரான இச்சிலையின் அற்புதத்தை எத்தனை உணர்ந்து பார்த்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.இனி பார்ப்பார்கள் என்பதற்கு உத்திரவதமும் இல்லை.அப்புறம் ஏன் மாய்ந்து மாய்ந்து எழுதனும்.

வாழும் காலத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் அடுத்த தலைமுறையின் தோளுக்கு பரிமாற்றம் செய்யவேண்டுமே, எல்லோருமே ஹெர்குலஸாக இருக்கிறார்கள்.அட்லஸாக கூவிக்கொண்டிருக்கிறோம்.

சிலகளின் அளவுகள் தளமானங்களில் உறுதிசெய்யப்படும்.இதில் பல வகை உண்டு.பெரும்பாலும் ஆண் தெய்வ உருவங்கள் உத்தம தஸதாளத்திலும் பெண் தெய்வ உருக்குள் மத்திம தஸதாளத்திலும் அமைக்கப்படுவது வழக்கம்.

சிலைகள் ஏதாவது ஒருவகையில் தான் அமைக்கப்படும்.என் பார்வையில் இச்சிலை உத்தமதஸதாளத்தில் சிவபாகமும் மத்திம தஸதாளத்தில் சக்தி பாகம் அமைக்கப் பட்டிருக்கிறது. இரண்டிற்கும் 4 விரல் வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டைச் சரிசெய்யத் தான் (மத்திய சூத்திரம்) சிவபாகத்தை அதாவது அப்பனை காளை மீது ஒய்யாரமாக சாய்ந்திருப்பதாக காட்டியுள்ளனர்.

வலது நாசியில் 12 அங்குலம் சுவாசமும் இடதுநாசியில் 16 அங்குலமும் நடைபெறுகிறது.நம் சித்தர்களின் நிலைப்பாட்டின்படி சுவாசச்சுற்றில் 12 அங்குல சுவாசம் செய்து 4 அங்குல சுவாசத்தை வெளியேற்றி 8 அங்குல சுவாசக்காற்றை உள்ளே உலாவவிட்டால் 120 ஆண்டுகள் வாழலாம் என நம்பப்படுகிறது.

இந்த மூச்சுப் பயிற்சி பல ஆண்டுகளாக முன்னோர்கள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இச்சிலைக்கும் இந்த கணக்கு வழக்கிற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது இதன் தளமானத்தால் உணரமுடிகிறது.

இது தான் மரபுமாறாப் புதுமை. நித்தவிநோதகனின் படைப்பாக்கம் . இராசேந்திரனின் எண்ணக் கிடக்கை. கங்கைகொண்டசோழீசுரத்தின் தனித்தன்மை.